Tuesday, August 31, 2010

நம் ஊர் அரசியல்வாதிகளைப் பற்றி அதிகம்
சொல்ல தேவை இல்லை தான். சமீபத்தில் எனக்கு வந்த
குறுஞ்செய்தி இது:
நம் ஊர் அரசியல்வாதி ஓபாமாவை சந்திக்க
சென்றார்.
நம் ஊர் அரசியல்வாதி: உன் வீடு நல்லா இருக்கே! எப்படி கட்டின?
ஓபாமா: (ஓர் பாலத்தைக் காட்டி) அதோ பாலம் தெரியுதா? அந்த பாலத்தைக் கட்டும் போது ‘சுரண்டி’ வந்த பணத்தில் கட்டியது.
நம் ஊர் அரசியல்வாதி: ஓகோ!
(சிறிது நாள் கழித்து ஓபாமா இங்கு (நம் ஊர் அரசியல்வாதியின் வீட்டுக்கு) வருகிறார்)
ஓபாமா:உன் வீடு ரொம்ப நல்லா இருக்கே! எப்படி கட்டின?
நம் ஊர் அரசியல்வாதி: (கையை நீட்டி) அதோ பாலம் தெரியுதா?
ஓபாமா: இல்லையே!
நம் ஊர் அரசியல்வாதி: பாலத்தையே ‘சுரண்டி’ கட்டியது என் வீடு!
ஓபாமா:!!!!!!!

Wednesday, August 18, 2010

சகலகலா வல்லவன்

கமல்ஹாசன் அவர்கள் நல்ல நடிகர் என்பது அனைவருக்கும்
தெரியும். கமல் கவிதை கூட நன்றாக எழுதுவார். அவரின் கவிதைத்
துளிகள் சில:

“கலிலியோவின் உருண்டை உலகம்
சதுரமானது!
விமானத்தின் சன்னல் வழி
பார்க்கும் போது!”

“உலகம் தோன்றியதில் இருந்து
ஆப்பிள் எதிரிதான்!
அன்று - ஆதாம் ஏவாளுக்கு!
இன்று - மைக்ரோசாப்டிற்கு!”


இதனால்தான் கமல் “சகலகலா வல்லவன்”!

முதல் கவிதை!

மிகவும் கஷ்டப்பட்டு ஒரு கவிதை எழுதிவிட்டேன். இதோ:


மக்களே மாக்களாய்
சட்டமே சாட்டையாய்
பதவிகளே பாகனாய்
இன்றைய அரசியல்!
-பட்டதாரி

எப்படி?

Friday, August 13, 2010

இயக்குனர் மிஷ்கின்

இயக்குனர் மிஷ்கின்:
இயக்குனர் மிஷ்கின் தமிழ் திரை உலகில் ஓர் நல்ல படைப்பாளி. குறிப்பாக அவரது படங்களில் திரைக்கதை மிகவும் நன்றாக இருக்கும். சமீபத்தில் இயக்குனர் மிஷ்கினின் பேட்டி ஒன்றை படித்தேன். அவற்றில் சில வரிகள்:
“சித்திரம் பேசுதடி படம் வெற்றி பெற்ற பின் நான் நந்தலலா படத்தின் கதையோடு சில தயாரிப்பாளர்களை அனுகினேன். தோல்வியே மிஞ்சியது. அதனால் உண்டான கோபத்தில் ஒரு வாரம் உட்கார்ந்து ஒரு கதை எழுதினேன்.அதுதான் அஞ்சாதே ஆகியது. அதனால்தான் (கோபத்தில் எழுதியதால்) அப்படத்தில் அவ்வளவு துப்பாக்கி குண்டுகளும், ரத்தமும்.”
வணக்கம் நண்பர்களே!
அனைவரும் நலமா? நலம் என்றே நம்புகிறேன். நான் இந்த blogg-ல் என்ன எழுத அல்லது பதிவு செய்யப் போகிறேன் என்றால், நான் தினந்தோறும் பார்த்த, பார்க்கின்ற படித்த, பிடித்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன். அனைவருக்கும் இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்.