Friday, January 7, 2011

கவிதை

“உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே”
பாடிக் கொண்டே கையேந்தினான்
பிச்சைக்காரன்!

கவிதை

உலகத்திடம் உரக்கச் சொன்னேன்
பணம் மட்டும் வாழ்க்கை இல்லையென்று
ஆனால்
உலகம் என்னிடம் இடித்துச் சொன்னது
பணம் மட்டுமே வாழ்க்கை என்று!
இதோ இப்போதே கிளம்பி விட்டேன்
பணத்தை இப்போது சம்பாதிக்கவும்!
பாசத்தை திருவிழாக் கால விடுமுறைகளில் சம்பாதிக்கவும்!