Monday, August 22, 2011

அன்னா ஹசாரே

எனது இந்த blog உலகில் உள்ள பல நாடுகளில் உள்ள தமிழ் இணைய தள வாசகர்களால் படிக்கப்பட்டு வருவது மகிழ்ச்சியே! அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு அஹிம்சையின் மீது அதிக மதிப்பு உண்டு!. நாட்டின் 2வது சுதந்திர போரினையும்(ஊழலுக்கு எதிரானது) இப்போது மதிப்பிற்குரிய அன்னா ஹசாரே அவர்கள் காந்திய வழியில் நடாத்திக் கொண்டிருக்கிறார். அன்னாரது போராட்டம் வெற்றி பெற இந்த பட்டதாரி வணங்கி வாழ்த்துகிறேன்!.

பார்த்தது!

ம்ம்ம்…. மீண்டும் அந்த auto driver கதைக்கு வருகிறேன். அந்த maruthi கார் ஆசாமி காரினை எடுத்து விட்டு கிளம்பிவிட்டார். ஆட்டோ டிரைவரையும் சேர்த்துக் கொண்டுதான்!. என்ன ஆட்டோ டிரைவர் வெளியே தொங்கிக் கொண்டிருந்தார். நல்ல வேளையாக அப்போது பார்த்து signal விழுந்தது. அந்த maruthi கார் ஆசாமி காரை நிறுத்தினார். இது நடந்தது சென்னை முகப்பேரில்! இந்த மனிதர்களை நான் என்னவென்பது!. கடைசியாக அந்த auto driver 300 ரூபாய் பணம் வாங்கிக்(பிடுங்கி) கொண்டுதான் விட்டார்!. Auto driver ஆட்டோவுக்கு வந்த உடன் என்னிடம் சொன்னது “இவன் வீட்டுக்கு போவதற்குள் எத்தனை பேரை கொல்லப் போறானோ!”.