Friday, December 30, 2011

மென்பொருள் பதிவு - 2

நான் நெடு நாட்களாக பயன்படுத்தி வரும் ஒரு மென்பொருள் பற்றி இந்த பதிவில் பதிவு செய்ய விரும்புகிறேன். உண்மையாய் சொல்வதேயானால், இந்த மென் பொருள் பற்றி எனது முதல் பதிப்பிலேயே எழுதி இருக்க வேண்டும், முடியவில்லை. நான் பேசுவது NHM Writer எனப்படும் மென்பொருள் பற்றித்தான். இதனைக் கொண்டுதான் நான் அனைத்து பதிவுகளையும் எழுதி வருகிறேன். இப்போது புரிந்து இருக்குமே இதன் பயன் என்னவென்று!!!. மற்றும் தமிழில் எழுதுவது என்பது NHM Writer இருந்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். . வேண்டுபவர்கள் இந்த உரலியினை software.nhm.in/products/writer) தொடரவும்.

Thursday, December 29, 2011

மென்பொருள் - பதிவு

இந்த வலைப் பதிவில் எதனைப் பற்றியும் எழுதலாம். மென்பொருள் வல்லுனராக இருந்து கொண்டு எந்த மென்/வன் பொருள்களைப் பற்றியும் எழுதாமல் இருப்பது கஷ்டமே. அதனால்தான் இந்தப் பதிவு. சமீபத்தில் Google தேடுதலில் புதிதாக ஒரு வசதியினை அறிமுகப் படுத்தியுள்ளது. என்னவென்றால், நீங்கள் கம்ப்யூட்டர் முன் ஒரு சொல்லை சொன்னால் போதும் இப்போது Google உங்கள் சொல்லை உள்ளீடாகப் பெற்று, தேடுதலைத் தொடங்கும். ஆனால் இந்த வசதி chrome browser-ல் மட்டும் இப்போது உள்ளது. மேலும் தகவலுக்கு இந்த உரலியினை (http://www.google.com/insidesearch/voicesearch-chrome.html) தொடரவும்.மற்றும் ஒரு சுவையான தகவல் www.google.com சென்று askew என்று டைப் செய்யுங்கள்! தெரிந்து கொள்வீர்கள்…..

Tuesday, December 27, 2011

சிக்கன் 65-ன் வரலாறு

சமீபத்தில் புகாரி உணவு விடுதிக்கு சென்றிருந்தேன். வாய்க்கு நல்ல உணவும், சில சுவையான தகவல்களும் கிடைத்தது. புகாரி உணவு விடுதி 1951 ஆம் ஆண்டு திரு A.M. புகாரி என்பவரால் ஆரம்பிக்கப் பட்டது. இந்த விடுதியின் கிளைகள் இந்தியாவின் பெருநகரங்கள் மற்றும் Overseas நாடுகளில் உள்ளது. சென்னையில் அசோக் நகர் மற்றும் சாந்தி காலனி ஆகிய இடங்களில் மட்டும் உள்ளது. மற்றும் ஒரு சுவையான தகவல் என்னவென்றால் சிக்கன் 65 என்று சொல்லப்படும் சுவையான சிக்கன் கறி -வகை திரு A.M. புகாரி அவர்களின் கண்டுபிடிப்பு ஆகும். 1965 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்டதால் சிக்கன் 65 என்று அழைக்கப்படுகிறது. இந்த விவரங்கள் அனைத்தும் அந்த உணவு விடுதியின் மெனு கார்டில் முதல் பக்கத்தில் வாசிக்கக் கிடைக்கின்றது….

Tuesday, December 13, 2011

பிரபலங்களின் வீடுகள் – ஒரு பார்வை

மைக்கேல் ஜாக்சனின் வீடு.


பாப் பாடகி (Pop Singer) பிரிட்னி பியர்சின் வீட்டின் வான் வழிக் காட்சி.



ஹாலிவுட் நடிகர் (Hollywood Actor) வில் சுமித்தின் los angels வீடு.


ஹாலிவுட் நடிகை (Hollywood Actress) சாண்ட்ரா புல்லக்கின் வீடு.


ஓப்ரா வின்ப்ரேவின் ஹவாய் பண்ணை வீடு

Titanic புகழ் ஹாலிவுட் கனவு நாயகன்(heartthrob) லியனார்டோ டிகாப்ரியோ வளர்ந்த வீடு.



ஹாலிவுட் நடிகை (Hollywood Actress) ஜெனிபர் அனிஸ்டனின் வீடு. வான் வழி காட்சி (Aerial View).

ஹாலிவுட் நடிகர் (Hollywood Actor) ஜார்ஜ் குலூனியின் 1.76 மில்லியன் மதிப்புள்ள வீடு.



முகேஷ் அம்பானியின் 27 மாடி குடியிருப்பு. 3 ஹெலிஹாப்டர் இறங்கும் வசதி, 160 கார்கள் நிறுத்தும் வசதி கொண்டது.

சச்சின் புதிதாக கட்டியுள்ள வீடு இது… மும்பை பந்த்ரா பகுதியில் உள்ளது.

Sunday, December 11, 2011

விலை ஏற்றம்!

சமீபத்தில் தமிழகத்தில் பால் மற்றும் பஸ் கட்டணங்கள் விலை ஏற்றப்பட்டது அனைவரும் அறிந்ததே. இதைப் பற்றி தான் இங்கு அலசப் போகிறேன். பொதுத்துறை நிறுவனங்களான போக்குவரத்து துறையும் மற்ற பொதுத்துறை நிறுவனங்களும் நஸ்டத்தில் இயங்குவதால்தான் இந்த விலை உயர்வு என்று நமது முதல்வர் அறிவித்துள்ளார்.

முதல்வர் அவர்களுக்கு சாமானிய மக்களின் அவஸ்தைகள் புரிவதில்லை என்று நினைக்கிறேன். என்றாவது ஒரு நாள் பஸ்ஸில் போயிருந்தால் ஒரு வேளை நமது கஸ்டம் புரியும் என எண்ணுகிறேன். ஆவின் பாலையாவது குடித்திருப்பாரா என்ன? கடவுளுக்கே வெளிச்சம். ”அவருக்குத்தான் கொட நாடு எஸ்டேட் இருக்கேப்பா? என்னத்துக்கு இது எல்லாம்?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஏன் ஒரு முதல்வர் நினைத்தால் எதனையும் செய்ய முடியாதா? ஒரு நாள் பஸ்ஸில் பயணம் செய்துதான் பாருங்களேன் முதல்வரே. அப்போதுதான் சாலைப் போக்குவரத்து துறை அமைச்சரின் லட்சணமும் உங்களுக்குத் தெரியும். உடனே அமைச்சரின் இலாகாக்களை மாற்றி மாற்றி விளையாடலாம். அதுதானே உங்களுக்கு பிடித்த விளையாட்டு ஆயிற்றே!. நமக்கு பொதுத்துறை நிறுவனம் எப்படி போனால் என்ன? என்ன முதல்வர் அவர்களே சரியா? இல்லையெனில் இப்படி செய்யலாம், எதிர்கட்சியினர் முந்தைய ஆட்சியில் (தெரியாத்தனமாக) செய்த நல்ல திட்டங்களை அதாவது நூலகத்தை இடித்து மருத்துவமனையாக்குவது, கல்வித்திட்டங்களை கலைப்பது போன்ற விளையாட்டுக்கள். ஏற்கனவே நான் போக்குவரத்து துறையின் அவலங்கள் பற்றி எழுதியிருந்தேன். அந்த அவலங்களைப் போக்கினாலே போக்குவரத்து துறை லாபத்தில் இயங்கும்.

உலக மகா உத்தமர்கள்

நம் நாட்டில் நான் கண்ட சில உத்தமர்கள்! :)