Monday, July 23, 2012

ப்ளெக்ஸ் பேனரும் – தமிழ் மக்களும்


                                     கடந்த 5 வருடங்களாக தமிழ் நாட்டில் ”ப்ளெக்ஸ் கலாச்சாரம்” (Flex Culture) என்று சொல்லும் அளவிற்கு ப்ளெக்ஸ் போர்டுகள் வைக்கப் படுகின்றன. முந்தைய நாட்களில் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டன. அதுவும் ஏதாவது ஒரு திருவிழா அல்லது மண விழா காலங்களில் மட்டும்.இப்போது ஏன் எதற்கு என்றே தெரியாமல் ப்ளெக்ஸ் வைக்கப்படுகின்றது.

Friday, July 20, 2012

டுவிட்டுகள்


ஃபேஸ் புக்கை சுற்றி வந்த போது கண்ட சில சொல்வடைகள்:

அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது..!!
 ////////////////////////////////////////
பிரபுதேவாவை விட்டு பிரிந்தார் நயன்தாரா #
இப்போ கேளுங்க டா யார் அடுத்த பிரபுதேவான்னு..:-);-)
 //////////////////////////////////////// 

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:
1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல்நம்மை காப்பாற்றுகிறது .
2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது . உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.
3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்து க் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.
4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும்..:-):-)
  ////////////////////////////////////////

இதயத்தின் துடிப்பை கூட
உணர்ந்து விட முடிகிறது
முடியாதது மனதின்
அழுகை மட்டுமே..!!
  ////////////////////////////////////////
அப்பாக்களின் அன்பு, பலாப்பழம் போன்றதே! உள்ளிருக்கும் இனிப்பினை, நாம் அவ்வளவு எளிதில் உணர முடிவதில்லை..!!
  ////////////////////////////////////////

ரூபாய் நோட்டுகளில் தேச தலைவர்கள் படங்கள் - ரிசர்வ் பேங்க் முடிவு...

#
சத்திய சோதனை..;-(
 ////////////////////////////////////////