எப்போதோ பண்பலை வானொலியில் கேட்ட கவிப்பேரரசு. வைரமுத்து அவர்களின் கவிதை உங்களுக்காக:
என்னைப் பார்க்க ஊரில் இருந்து வந்திருந்தனர்
உறவினரும் நண்பரும்!
“அண்ணே! சிவாஜியை பார்த்து இருக்கீங்களா?
ரஜினியுடன் நல்ல பழக்கமா?” என்றெல்லாம்
விசாரித்தனர்!
நானும் நன்றாகச் சிரித்து சமாளித்தேன்!
அவர்கள் சென்ற பின்
அறையில் உள்ள புத்தகங்கள் எல்லாம்
என்னிடம் கேட்டன:
”இவ்வளவு கேட்டார்களே! எங்களைப் பற்றி ஏன் ஒருவரும் விசாரிக்கவில்லை?”
நான் மெளனமானேன்!
No comments:
Post a Comment